tamilnadu

img

கண்டெய்னர் லாரி மீது ஆம்னி பேருந்து மோதல்: 7 பேர் படுகாயம்  

கிருஷ்ணகிரியில் கண்டெய்னர் லாரி மீது ஆம்னி பேருந்து மோதி விபத்தில் 7 பேர் படுகாயமடைந்துள்ளனர்.  

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையிலிருந்து பெங்களூருக்கு தனியார் ஆம்னி பேருந்தில் 30 பயணிகள் சென்று கொண்டிருந்தனர். கிருஷ்ணகிரியில் ராயக்கோட்டை மேம்பாலம் அருகில் நேற்று அதிகாலை ஆம்னி பேருந்து சென்று கொண்டிருந்தபோது, முன்னால் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரியை முந்தி செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. ஆம்னி பேருந்து லாரியை பின்தொடர்ந்து வந்ததில் லாரியின் பின்பக்கத்தில் மோதியதில் ஆம்னி பேருந்தின் முன்பகுதி முழுவதும் சேதமடைந்தது. இந்த விபத்தில் ஆம்னி பேருந்து டிரைவர் உட்பட 7 பேர் படுகாயமடைந்துள்ளனர்.  

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அதனைதொடர்ந்து விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

;