tamilnadu

மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்கக் கோரி போராட்டம்

 தரங்கம்பாடி, ஜூலை 23- நாகை மாவட்டம் மயிலாடுதுறையை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டத்தை அறிவிக்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றக் கோரி கடந்த 1 வார மாக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வரும் சூழலில் மக்களின் போராட்டங்களை கண்டு கொள்ளாமலும், கோரிக்கைகளை தமிழக முதல்வரிடம் முன்வைக்காமல் உள்ள மயிலாடுதுறை தொகுதி எம்.எல்.ஏ.,இராதாகிருஷ்ணன் அலுவலகத்தை செவ்வாயன்று வழக்கறிஞர்கள் 100-க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கையை முழக்கமிட்டவாறு நீதிமன்றத்திலிருந்து முக்கிய வீதிகள் வழியாக சட்டமன்ற அலுவலகம் நோக்கி வந்த வழக்கறிஞர்களை காவல்துறையினர் தடுத்த போதும் தடுப்புகளை மீறி வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடு பட்டனர்.  இதே போல் கொள்ளிடம் பகுதியில் முழு கடை அடைப்பு போராட்டம் நடைபெற்றது. அனைத்து வணிகர் சங்கங்களின் சார்பில் முழு கடை அடைப்பு நடைபெற்றது. தைக்கால், புத்தூர், எருக்கூர், அரசூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அனைத்து வியாபாரக் கடைகளும் அடைக்கப்பட்டன.

;