tamilnadu

img

தென்காசி, நெல்லையில் சிபிஎம் மக்கள் சந்திப்பு இயக்கம்

தென்காசி, ஆக.26- இந்தியாவை பாதுகாப்போம், மக்களை பாதுகாப்போம்’ என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பாக மக்கள் சந்திப்பு இயக்கம்- ஆர்ப்பாட்டம் செட்டியூரில் கிளை செயலாளர் அண்ணாத்துரை தலைமையில் நடைபெற்றது. மாவட்ட குழு  உறுப்பினர் எம்.வேல்முருகன், ஒன்றிய குழு உறுப்பினர் கருப்பசாமி, அற்பத மேரி, முத்து மற்றும் பலர் பங்கேற்றனர். கட்சி சார்பில் சிவகிரியில் 5 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பழைய காவல் நிலை யம் அருகில்  சிவசுப்பிரமணியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிவகிரி மெயின் பஜாரில் ராமசுப்பு தலைமை தாங்கினார்.   தெற்கு ரத வீதியில் ஆர்ப்பாட்டத்திற்கு கருப் பையா தலைமை தாங்கினார். காந்தி கலைய ரங்கம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு நடராஜன் தலைமை வகித்தார். கடையநல்லூர் அருகே இடைக்காலில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு முருகையா தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் தி.கணபதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.திருநெல்வேலி என்.ஜி.ஓ காலனி ஜெபா சந்திப்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.பழனி, பாளை தாலுகா செயலாளர் பா.வர குணன், கமிட்டி உறுப்பினர் துரை, கிளைச் செய லாளர் டி.கோபாலன் கலந்து கொண்டனர்.

;