tamilnadu

பாலபாஸ்கர் மரணத்தில் சிபிஐ விசாரணை

திருவனந்தபுரம், ஜுலை 30- பிரபல் வயலின் இசைக் கலை ஞர் பாலபாஸ்கரும் அவரது மக ளும் வாகன விபத்தில் உயிரி ழந்தது தொடர்பான வழக்கை மத்திய குற்றப்பிரிவு (சிபிஐ) விசா ரிக்க உள்ளது.  இந்த வழக்கை சிபிஐ விசா ரிக்க வேண்டும் என கடந்த ஆண்டே கேரள அரசு பரிந்துரை செய்தது. மரணத்தில் மர்மம் உள்ளதாக பாலபாஸ்கரின் தந்தை உண்ணி தெரிவித்திருந் தார். மரணத்தில் தங்க கடத்தல் கும்பலின் தொடர்பு குறித்து விசா ரிக்க வேண்டும் என அவர் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு அளித்த மனுவில் கேட்டுக்கொண் டிருந்தார். அதன் அடிப்படையில் இந்த வழக்கை சிபிஐ விசார ணைக்கு கடந்த டிசம்பர் மாதம் கேரள அரசு பரிந்துரை செய் தது.

;