tamilnadu

img

திருச்செந்தூரில் திடீரென கடல் 50 அடிக்கும் மேல் உள்வாங்கியதால் பரபரப்பு!

திருச்செந்தூரில் திடீரென கடல் 50 அடிக்கும் மேல் உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தென் கடலோர பகுதியில் கடந்த இரண்டு வார காலமாக பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்பட்ட கடல் அலை சீற்றத்தின் காரணமாகக் கடந்த சில தினங்களுக்கு முன் ஒரு குழந்தை மற்றும்  பயிற்சி மருத்துவ மாணவ, மாணவியர்கள் உயிரிழந்தனர்

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் இன்று திடீரென 50 அடிக்கும் மேலாகக் கடல் உள்வாங்கியுள்ளது. கடலில் உள்ள பாறை திட்டுக்கள் அனைத்தும் வெளியே தெரிகின்றன. கடலில் உட்புறம் இருந்த பாசி படலங்கள் படர்ந்து காணப்படுகிறது முருகன் கோயிலுக்கு வந்த பக்தர்கள் அனைவரும் கடல் உள்வாங்கிய காட்சியைத் தனது மொபைல் போனில் புகைப்படங்களாக எடுத்துச் சென்றனர்.

கோயிலுக்கு வந்த பக்தர்கள் ஆபத்தை உணராமல் கடலில் ஆழமான பகுதிக்குச் சென்று குளித்து வந்தனர். இதையடுத்து, பக்தர்கள் கடற்கரைக்கு அருகே செல்ல வேண்டாம் என்றும், கடலில் இறங்கிக் குளிக்க வேண்டாம் என்றும் காவல்துறை எச்சரித்துள்ளது.

 

;