tamilnadu

img

நூறு நாள் வேலை தொழிலாளருக்கும் விடுமுறை ஊதியம் வழங்க கோரிக்கை

திருச்சிராப்பள்ளி, ஏப்.26-அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க திருச்சி புறநகர் மாவட்டக்குழு கூட்டம் வெள்ளியன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஜே.சுப்ரமணியன் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் வீ.அமிர்தலிங்கம், மாநில குழு முடிவுகளை விளக்கி பேசினார். மாவட்ட செயலாளர் அ.பழநிசாமி எதிர்கால பணிகள் குறித்து பேசினார். எம்.வீரவிஜயன், எஸ்.தெய்வநீதி, அ.கனகராஜ், எம்.கண்ணன், திலகவதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், நடைபெற்ற மக்களவைத் தேர்தலையொட்டி சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. ஆகவே அனைத்து நூறு நாள் வேலை தொழிலாளர்களுக்கும் விடுமுறைக்கான ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் ஆசிய தடகள விளையாட்டு போட்டியில் 200 மீ ஓட்டத்தில் தங்கம் வென்ற திருச்சி கோமதி மாரிமுத்துவுக்கும், 1500 மீ. ஓட்டத்தில் தங்கம் வென்ற சித்ராவுக்கும் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது. 

;