tamilnadu

img

மோடியை நம்பி மீண்டும் ஏமாந்து விடாதீர்கள் திருநாவுக்கரசர் பேச்சு

திருச்சிராப்பள்ளி, ஏப்.15- மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் திருச்சி நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர் ஒத்தக்கடை, ஜங்சன்,காஜாநகர் குடிசை பகுதி உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் செய்து வாக்குசேகரித்தார். இதில் அவர் பேசியதாவது: திருச்சி மாநகர் மக்களின் அடிப்படை பிரச்சனைகள் அனைத்தும்உடனுக்குடன் தீர்த்து வைப்பேன். மோடி பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்து 5 ஆண்டுகளை ஓட்டி விட்டார். இனியும்அவரது பொய்யான வாக்குறுதிகளில் ஏமாந்து விடாதீர்கள் என்றார். பிரச்சாரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிமற்றும் கூட்டணி கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

;