tamilnadu

img

அடுத்த தாக்குதல் கருப்பு பூஞ்சைக்கு ஆயத்தம் ஆவோம்: வைகோ.....

சென்னை:
ஏற்கெனவே கொரோனா தாக்கி, மருத்துவம் செய்து நலம் பெற்று மீண்டு வந்தவர்களை, கருப்பு பூஞ்சை (மியூகோர் மைகோசிஸ்) என்ற புதிய தொற்று தாக்குவதாக செய்திகள் வருகின்றன, இதன் அறிகுறிகள் தமிழ்நாட்டிலும் தெரியத் தொடங்கி இருக்கின்றது, இதற்கான மருந்து இருப்பை தமிழக அரசு தயாராக வைத் திருக்க வேண்டும் என வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டிருக்கும் அறிக்கை வருமாறு:-

“தமிழ்நாட்டில் ஒவ் வொரு நாளும் குறைந்தது 30000 ஆயிரம் பேர் கொரோனா தொற்று பாதிப் புக்கு உள்ளாகி, மருத்துவமனைகளைத் தேடி அலைந்து கொண்டு இருக் கின்றார்கள். இந்த நிலையில், ஏற்கனவே கொரோனா தாக்கி, மருத்துவம் செய்து நலம் பெற்று மீண்டு வந்தவர்களை,  கருப்பு பூஞ்சை என்ற புதிய தொற்று தாக்குவதாக செய்திகள் வருகின்றன.மகாராஷ்டிர மாநிலத்தில் 64 பேர் இறந்து விட்டார்கள், தில்லி மற்றும் கர்நாடகாவிலும் தாக்கி இருக்கின்றது. இதன் அறிகுறிகள் தமிழ்நாட்டிலும் தெரியத் தொடங்கி இருக்கின் றது.தற்போது கோவில்பட்டியில் இரண்டு பேர் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாகத் தகவல் வந்தது. ஏற்கெனவே நீரிழிவு நோயால் பாதிக்கப் பட்டவர்களை கருப்பு பூஞ்சை  உடனடியாகத் தொற்றுகின்றது. இது கண்கள், பற்கள் வழியாக குருதியில் கலந்து, உயிரைப் பறிக்கும் தன்மை உடையது. இந்த நோய்க்கு, மருந்தை, இந்தியா முழுமையும் பரிந்துரைக்கின்றார்கள்.

கொரோனா மருந்துகள், உயிர்க்காற்று உருளைகளுக்குக் கடுமையான தேவை ஏற்பட்டு இருப்பதுபோல, அடுத்து இந்த மருந் தும் தேவைப்படுகின்றது. எங்கே கிடைக்கும் என மக்கள் தேடுகின்றார்கள். எனவே, தமிழக அரசு, இதுகுறித்துக் கவனம் செலுத்தி, ஆயத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த மருந்து கிடைக்கும் இடங்கள், இருப்பு குறித்த தகவல் களை, தமிழக அரசு மக்கள் நல்வாழ்வுத்துறை இணையத்தில் வெளியிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின் றேன்.பொதுமக்கள், சமூக விலகலைக் கடைப்பிடித்து, வாய் மூக்கு கவசங்களை அணிந்து, மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். ஐரோப்பிய நாடுகளில் கரோனா இல்லை என அறிவித்து விட்டார்கள். அதுபோல, அனைவரும் தடுப்பு ஊசி போட்டுக் கொள்ளுங் கள், அடுத்த ஆறு மாதங்களுக்குள் கொரோனாவை ஒழிப்போம்.இவ்வாறு தெரிவித்துள்ளார்.

;