tamilnadu

img

குறவன் இன மக்களை இழிவு செய்யும் யூ டியூப் பதிவுக்கு தடை... தமிழக அரசுக்கு கோரிக்கை

சென்னை:
தமிழ்நாட்டில்  பெரும்பாலான மாவட்டங்களில் கோவில் திருவிழாக்களில் குறவன் -குறத்தி ஆட்டம் என்ற பெயரில் குறவன் இன மக்களை இழிவுபடுத்தும் விதமாக பேசியும் நூற்றுக் கணக்கான மக்கள் முன்னிலையில் ஆபாசமான செயல்களை செய்து காட்டியும் நடத்தப்படும் நடன நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை தமிழ்நாடு குறவன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கம் வன்மையாக கண்டித் துள்ளது.

இதுகுறித்து அச்சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ஏ.வி. சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கை:"தமிழகத்தில் கோவில் திருவிழாக்களில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் பிறந்த ஆண்களையும் பெண்களையும் தொடர்புபடுத்தி நடத்தப்படும் ஆபாச நடனத்திற்கு குறவன்- குறத்தி ஆட்டம் என்று பெயர் சூட்டுவது கண்டிக்கத்தக்கது".இந்த சமூகத்தில் வாழும் குறவன்- குறத்தி இப்படித்தான் இழிவாக நடந்துகொள்வார்கள் என எடுத்துக்காட்டும் விதமாக நடத்தப்படும் ஆபாச நடனத்தால் தமிழகத்தில் வாழும் குறவன் இன மக்களிடையே கொந்தளிப்பும்  மன அழுத்ததும் ஏற்பட்டுள்ளது.  ஒரு குறிப்பிட்ட சமூகத்தை இழிவுபடுத்தும் விதமாக பல பேர் முன்னிலையில்  பல நாட்களாக நடத்தப்படும் இந்த நடனத்தை சட்டத்தின்  காவலனான காவல் துறையும் சட்டரீதியான நடவடிக்கை ஏதும் எடுக்காமல் வேடிக்கை பார்ப்பது மிகவும் வேதனையாக உள்ளது என்றும் தமிழக அரசும், காவல்துறையும்  இந்தநடன நிகழ்ச்சிகளை உடனடியாக தடை செய்ய வேண்டும்.

குறவன்- குறத்தி ஆட்டம் என்ற பெயரில் நடத்தப்படும் ஆபாச நடனத்தை நாடெங்கும் காணும் விதமாக 'யூ' ட்யூப்-ல் பதிவேற்றம் செய்து குறவர் இன மக்களை கேவலப்படுத்தும்  பதிவேற்றத்தை தடை செய்து அதுபோன்ற காட்சிகள் அனைத்தையும் தமிழக அரசும், காவல்துறை தலைவரும் தலையிட்டு உடனடியாக நீக்க வேண்டும். குறவன் -குறத்தி ஆட்டம் என்று யூ ட்டியூபில் பதிவேற்றம் செய்து பணம் பார்க்கும் கும்பல் மீது தாழ்த்தப் பட்டோர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்து தண்டனை வழங்க வேண்டும்.

கோரிக்கைகளை வலியுறுத்தி எங்கள் சங்கத்தின் சார்பாக ஆகஸ்டு 6 ஆம் தேதி காலை 10 மணிக்கு குறவன் இன மக்கள் வாழும் பகுதிகளில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.   

;