india

img

மக்களவை தேர்தல் : 3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு

மக்களவை தேர்தலுக்கான 3-ஆம் கட்ட வாக்குப்பதிவு செவ்வாய்கிழமை மாலை 7 மணியோடு நிறைவடைந்துள்ளது.

நாடு முழுவதும் 11 மாநிலங்களில் உள்ள 93 தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு இன்று நடைபெற்றது.

பிற்பகல் 1 மணி நிலவரப்படி 39.92 சதவிகிதம் வாக்குப் பதிவாகியிருந்தது. அதிகபட்சமாக மேற்கு வங்கத்தில் உள்ள தொகுதிகளில் பிற்பகல் 1 மணியளவில் 49.27 சதவிகித வாக்குகள் பதிவாகின.

குஜராத்தில் 25, கர்நாடகத்தில் 14(இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு), மகாராஷ்டிரத்தில் 11, உத்தர பிரதேசத்தில் 10, மத்திய பிரதேசத்தில் 9, சத்தீஸ்கரில் 7, பீகாரில் 5, அஸ்ஸாம், மேற்குவங்கத்தில் தலா 4, கோவாவில் 2, தாத்ரா-நகர் ஹவேலி மற்றும் டாமன் – டையூ யூனியன் பிரதேசத்தில் 2 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது

;