districts

img

அரியலூர் அருகே லாரி மீது கார் மோதி கோர விபத்து - 4 பேர் உயிரிழப்பு

அரியலூர் மாவட்டம் ஏலாக்குறிச்சி பிரிவு சாலை அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது.

அரியலூர்-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை  ஏலாக்குறிச்சி பிரிவு அருகே ஜல்லி ஏற்றிக்கொண்டு வந்த லாரி சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது வேகமாக கார் லாரியின் மீது வேகமாக மோதியுள்ளது.

இந்த கோரமான விபத்தில் கார் முற்றிலுமாக சேதமடைந்தது. இதனையடுத்து அந்த வழியாக வந்தவர்கள் காரில் உள்ளவர்களை மீட்க பணியில் ஈடுபட்டனர். ஆனால் காரில் பயணித்த நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தது தெரியவந்தது. உயிரிழந்த 4 பேரும் ஆண்கள் என்பதும், இவர்கள் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், தெரியவந்துள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து காவல்துறையினர் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

 

;