tamilnadu

img

சாத்தான்குளம் அருகே  7 வயது சிறுமி  மர்ம மரணம்....  காட்டுப்பகுதியில் உடல் மீட்கப்பட்டது...

கோவில்பட்டி 
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே வடலிவிளை பகுதியில் இன்று காலை (புதன்) 7 வயது நிரம்பிய சிறுமி அருகில் விளையாட சென்றுள்ளார்.  மதிய நேரமாகியும் சிறுமி வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றமடைந்த பெற்றோர் தேடியுள்ளனர். பின்னர் காட்டுப்பகுதியில் ஒரு தண்ணீர் டிரம்மில் சிறுமி சடலமாக மீட்கப்பட்டார். 

சிறுமியின் மரணம் பற்றி உறுதியான தகவல் இன்னும் வெளியாகவில்லை. எனினும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீசார் 2 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். தற்போது சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஏற்கெனவே  சாத்தான்குளம் பகுதியில் நிகழ்ந்த லாக்அப் மரணம் தொடர்பான சோகம் இன்னும் மறையவில்லை. அதற்குள் மற்றொரு சம்பவம் நிகழ்ந்துள்ளதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.   

;