tamilnadu

img

தமிழகத்தில் புதிதாக 5,835 பேருக்கு கொரோனா தொற்று...  மேலும் 119 பேர் பலி...

சென்னை 
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் விகிதம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவால் உருக்குலைந்த சென்னை மண்டலம் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வரும் நிலையில், மற்ற மாவட்டங்களில் கொரோனா மின்னல் வேகத்தில் உள்ளது. குறிப்பாக தென் மாவட்டம் கொரோனாவால் அதிக சேதாரத்தை சந்தித்து வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 5,835 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,20,355 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று (வியாழன்) நாளில் 119 பேர் பலியாகிய நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 5.397 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சையில் இருந்த 5,146 குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், இதுவரை 2,61,459 பேர் கொரோனாவை வென்று இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர். இன்னும் 53,499 பேர் சிகிச்சையில் உள்ளனர்.   

;