tamilnadu

img

உத்தரகாண்ட் கனமழை:  17 பேர் பலி

உத்தரகாண்டில் கனமழைக்கு 17 பேர் பலியாகி உள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

உத்தரகாண்டில் கடந்த நாட்களாக இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் உத்தரகாசி நகரில் மோரி பகுதியில் உள்ள அரகோட் என்ற இடத்தில் 17 பேர் பலியாகி உள்ளனர்.  இந்நிலையில் இடி, மின்னலால் காயமடைந்தோர் மீட்கப்பட்டு டேராடூன் நகருக்கு விமானத்தில் கொண்டு செல்லப்பட்டு டூன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர். இதைத்தொடர்ந்து உத்தரகாண்டின் நிதி செயலாளர் அமித் நேகி, போலீஸ் உயரதிகாரிகள் உள்ளிட்டோர் அரகோட் பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
இந்நிலையில்   பேரிடர் மேலாண் செயலாளர்  முருகேசன் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, உத்தரகாண்டில் கனமழைக்கு 17 பேர் பலியாகி உள்ளனர் என கூறினார்.
 

;