states

img

உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கி 7பேர் பலி

உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக பல பகுதிகள்ல தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.  பித்தோராகர் மாவட்டத்தில் கடந்த 5  நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் ஜூம்மா பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பல வீடுகள் சேற்றில் புதைந்துள்ளது. இந்த நிலச்சரிவில் சிக்கி 7 பேர் பலியாகி உள்ளனர். இதில் 3 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. மேலும் மாயமாகி உள்ளவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 
 

;