india

img

பத்ம விருதுக்கு பொதுமக்கள்  பரிந்துரைக்கலாம்... பிரதமர் மோடி அறிவிப்பு...

புதுதில்லி:
பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களுக்குஒன்றிய அரசு பத்ம விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது. கடந்த 1954 ஆம் ஆண்டு முதல் குடியரசு தினத் தன்று இவ்விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. பத்மவிருதுகளுக்காக சாதிக்க உத்வேகம் அளிக்கும் நபர்களை மக்களே பரிந்துரைக்கலாம் என பிரதமர் மோடிதெரிவித்துள்ளார்.இதுகுறித்து பிரதமர் மோடி டிவிட்டர் பக்கத்தில், ‘‘களப்பணிகளில் சிறப்பான செயல்களை செய்யும் பலர் இந்தியாவில் உள்ளனர். ஆனால் அவர்கள் குறித்துநாம் அறிவதில்லை. உங்களுக்கு இப்படிப்பட்ட சாதிக்கத் தூண்டும் நபர்களை தெரியுமா? அப்படி தெரிந்திருந்தால், மக்களின் பத்ம விருதுகளுக்காக நீங்கள் பரிந்துரைக்கலாம். செப்டம்பர் 15 ஆம் தேதி வரை பரிந்துரைசெய்யலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

;