india

img

அரவிந்த் கெஜரிவாலின் மகளிடம் ஆன்லைன் மூலம் ரூ. 34,000 பணம் மோசடி 

தில்லி முதல்வர் அரவிந்த் கெஜரிவாலின் மகள் ஹர்ஷிதா. இவர் பழைய சோபா ஒன்றை ஆன்லைன் மூலம் விற்பனை செய்வதற்கு பதிவிட்டுள்ளார். இந்த விளம்பரத்தைப் பார்த்த ஒரு நபர் ஹர்ஷிதாவை தொடர்பு கொண்டு அவர் வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் அனுப்பிய க்யூ. ஆர். கோர்டை ஹர்ஷிதா ஸ்கேன் செய்துள்ளார். அப்போது அவரின் வங்கி கணக்கில் இருந்து அடுத்தடுத்து ரூ 20,000 மற்றும் ரூ. 4,000 பணம் காணாமல் போனது. இதையறிந்த ஹர்ஷிதா தில்லி சிவில் லைன் காவல்துறையில் புகார் அளித்தார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

;