districts

img

புதுச்சேரியில் மக்கள் ஒற்றுமை விழா

புதுச்சேரி, ஜன. 17- மக்கள் ஒற்றுமை சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் 12ஆம் ஆண்டு பொங்கல் விளையாட்டு மற்றும் கலை விழா புதுச்சேரி லாஸ்பேட்டை அசோக் நகரில் நடைபெற்றது. விழாவிற்கு வாலிபர் சங்கத்தின் துணைத் தலைவர் நிசாந்த் தலைமை தாங்கினார். செய லாளர் ஆனந்த், உழவர்கரை நகரச் செய லாளர் நிலவழகன், பொருளாளர் வினோத், மாணவர் சங்கத்தின் தலைவர் ஜெயபிர காஷ், துணைத் தலைவர் வந்தனா  ஆகி யோர் போட்டிகளில் வெற்றி பெற்றவர் களுக்கு பரிசு வழங்கி பாராட்டினர். நிகழ்ச்சியில் வாலிபர், மாணவர் சங்க நிர்வாகிகள் நிர்மல், கவுதம், ராஜ்குமார், சச்சின், ஈஸ்வர், விஸ்வா, சதீஷ், சபரி, பிரவீனா, அர்ச்சனா உள்ளிட்ட ஏராள மானோர் கலந்து கொண்டனர். முன்னதாக சோல்டு நேர்ஸ் பேண்ட் குழு வினரின் இசை நிகழ்ச்சியும், புதுவை அதிர்வு கள் பிரகாஷ் கலைக்குழுவினரின் தப்பாட்டம் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

;