districts

img

புதுச்சேரியில் மகளிர் தின சிறப்பு கருத்தரங்கம்

புதுச்சேரி,மார்ச்.12- சர்வதேச மகளிர் தின விழாவையொட்டி சமம் மக ளிர் சுயசார்பு இயக்கத்தின் சார்பில் புதுச்சேரியில் சிறப்பு கருத்தரங்கம்  நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு இயக்கத்தின் தலைவர் அன்பரசி ஜெயக்குமார் தலைமை தாங்கினார். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் சுதா சுந்தரராமன் துவக்கி வைத்து பேசினார்.  “மனித உரிமைகளும் பெண்களும்” என்ற தலைப்பில் சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியின் மனித உரிமை மற்றும் கடமை மற்றும் கல்வி துறை பேரசிரியர் ஆர்.நித்யா, “விட்டு விடுதலையாகி...” என்ற  தலைப்பில் தமுஎகச மாநில துணை பொதுச்செயலாளர், எழுத்தாளர் களப்பிரன் ஆகியோர் கருத்துரையாற்றினர். “சமூக சமத்து வத்திற் கான”நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மதிவாணன், ஹேமாவதி, கலியமூர்த்தி, நிர்வாகிகள் மாரிமுத்து, ரமேஷ் மற்றும் பலர் பேசினர்.

;