districts

img

காட்டுநாயக்கன் பழங்குடியினர் திருமணத்தில் தீக்கதிர் சந்தா

திருவண்ணாமலை,ஜூன் 17- திருவண்ணாமலை மாவட்டம் வந்த வாசியில் காட்டுநாயக்கன் பழங்குடி மக்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.ஆனந்தன் மகன் தினேஷ் - ரேணுகா  திருமண நிகழ்வு மும்முனி கிராமத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநில பொதுச்செயலாளர்  இரா. சரவணன்,  மாவட்டச் செயலாளர் மாரிமுத்து,  காட்டுநாயக்கன் பழங்குடி மக்கள் சங்கம் மாநிலத் தலைவர் அய்யனார்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வந்தவாசி வட்டார செயலாளர் அப்துல்காதர், இடைக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் சுகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த திருமண நிகழ்வில், தீக்கதிர் நாளிதழுகாகான ஆண்டு சந்தாவை, மணமக்கள் சங்க தலைவர்களிடம் வழங்கினர். 

;