districts

img

நெல்லை ’இருட்டுக்கடை அல்வா’ கடை உரிமையாளர் தற்கொலை

நெல்லை ’இருட்டுக்கடை அல்வா’ கடை உரிமையாளர் ஹரி சிங், மருத்துவமனையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நெல்லையில், இருட்டுக்கடை அல்வா மிகவும் புகழ்பெற்றது. இந்த கடையின் உரிமையாளரான ஹரி சிங், உடல்நலக் குறைவு காரணமாக, கடந்த 2 நாட்களுக்கு முன்பு பாளையங்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கோவிட்-19 அறிகுறி இருந்ததால், அவருக்கு கோவிட்-19 பரிசோதனை செய்யப்பட்டது. இதில், அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், மருத்துவமனையில் ஹரிசிங் இன்று தற்கொலை செய்துகொண்டார். மேலும், இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

;