tamilnadu

img

தேனி மாவட்டத்தில் முதல்கட்டமாக 283 தீக்கதிர் சந்தா தொகை ரூ 3.37 லட்சம் கே.பாலகிருஷ்ணனிடம் வழங்கப்பட்டது

தேனி:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேனி மாவட்டக்குழு சார்பில் முதல் தவணையாக 283 தீக்கதிர் நாளிதழுக்கு சந்தா தொகை ரூ 3.37 லட்சம் கட்சியின் மாநிலச்செயலாளர் கே. பாலகிருஷ்ணனிடம்வழங்கப்பட்டது .மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தீக்கதிர் சந்தா வழங்கும் நிகழ்ச்சி தேனியில் நடைபெற்றது. முதல்கட்டமாக ஆண்டு சந்தா 187, அரை ஆண்டு சந்தா 65, மாத சந்தா 31 என மொத்தம் 283க்கான சந்தா தொகை ரூ. 3 லட்சத்து 37 ஆயிரத்து150-ஐ தீக்கதிர் மாவட்ட பொறுப்பாளர் எல்.ஆர்.சங்கரசுப்பு, மாநிலச்செய லாளர் கே.பாலகிருஷ்ணனிடம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் டி.வெங்கடேசன், தீக்கதிர் மதுரை பதிப்பு பொது மேலாளர் ஜோ.ராஜ்மோகன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.ராஜப்பன், ஏவி.அண்ணாமலை, சி.முருகன், இடைக்கமிட்டி செயலாளர்கள் ஜி.எம்.நாகராஜன், கேஎஸ்.ஆறுமுகம், சி.சடையாண்டி, எம்.வி.முருகன், எஸ்.ராமர், எஸ்.செல்வம், சி.வேலவன், பி.மணவாளன் மணிமாறன் சோலை மற்றும்  கார்டுனிஸ்ட் வீரா உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர்.

;