tamilnadu

img

தந்தை - மகனுக்கு கொரோனா....தூத்துக்குடி பேட்மா நகர் பகுதி சீல் வைப்பு

தூத்துக்குடி 
தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து தில்லி மாநாட்டில் பங்கேற்ற 7 பேரை அதிகாரிகள் அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்பு வார்டில் அனுமதித்து பரிசோதனை மேற்கொண்டனா்.

இந்த பரிசோதனையில் தூத்துக்குடி பேட்மா நகரைச் சேர்ந்த தந்தை - மகனுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து அந்த பகுதிக்குச் சீல் வைக்கப்பட்டுத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. அங்குள்ள மக்கள் வெளியே செல்லவும், பிற பகுதி மக்கள் உள்ளே நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வருவாய், சுகாதாரத் துறையினர் அங்குள்ள 10 கி.மீ. தொலைவுக்கு உட்பட்ட பகுதிகளில் ஆய்வுப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

;