tamilnadu

img

தமிழகத்தில் இன்றும் மழை நீடிக்கும்... சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னை 
 வெப்பச்சலனம மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை  பெய்து வருகிறது. குறிப்பாக கடலோரப்பகுதி மற்றும் மேற்கு தொடர்ச்சி மழை பகுதியில் கனமழை பெய்து வரும் நிலையில், சென்னையில் பலத்த காற்றுடன் நேற்று கனமழை பெய்தது.

கோடை வெயிலால் தமிழகம் வெப்பக்காடாக மாறியுள்ள நிலையில், 2 நாட்களாக பெய்த மிதமான மழையால் வெப்பம் தணிந்து மக்கள் உற்சாகத்தில் மூழ்கியுள்ளனர்.  

இந்நிலையில் இன்றும் மழை தொடரும் எனவும், சென்னையில் பொறுத்தவரை வானம் மேகமூட்டமாக காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று  விழுப்புரம் பகுதியில் பெய்த கனமழையின் போது மேல்மலையனூர் பகுதியைச் சேர்ந்த மணி என்பவர் மின்னல் தாக்கி பலியாகினார்.
 

;