tamilnadu

img

இந்திக்கு எதிராக எவன் வந்தாலும் வெட்டுவேன் என்ற பாஜக நிர்வாகி மீது வழக்கு பதிவு

இந்திக்கு ஆதரவாகவும், திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு கொலை மிரட்டல் விடுத்தும் பேஸ்புக்கில் பதிவிட்ட கன்னியாகுமரி மாவட்ட பாஜக நிர்வாகி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தில்லியில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற இந்தி திவாஸ் கொண்டாடப்பட்டது. அப்போது நடந்த  நிகழ்ச்சியில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்தியாவை ஒருங்கிணைக்க இந்தி மொழி அவசியம் என்று கூறியிருந்தார். இதே கருத்தை தனது டுவிட்டர் பக்கத்திலும் பதிவிட்டிருந்தார். இதற்கு தமிழகம், கேரளா, கர்நாடகா  உட்பட பல்வேறு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதையடுத்து இந்தி திணிப்பு முயற்சிக்கு எதிராக திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்ட பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் நட்டாலம் சிவின்குமார், இந்தி மொழியை ஆதரித்து இந்திக்கு எதிராக வீதியில் எவன் வந்தாலும் அவனை வெட்டி வீழ்த்துவோம். இந்தி எங்கள் உயிரடா என்று  திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கொலை மிரட்டல் விடுத்தும் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார். இதுதொடர்பாக நட்டாலம் சிவின்குமார் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யக் கோரி மார்த்தாண்டம் காவல்நிலையத்தில் திமுக இளைஞரணி சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதனடிப்படையில் அவர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றன 
 

;