tamilnadu

img

போலி விசா வழங்கி ரூ.51 லட்சம் மோசடி; பாஜக நிர்வாகி மீது புகார்  

மயிலாடுதுறையில் போலி விசா வழங்கி ரூ.51 லட்சம் முறைகேடு செய்ததாக பாஜக நிர்வாகி மீது பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர்.  

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த புத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தராஜ். இவர் பாரதிய ஜனதா கட்சியின் கொள்ளிடம் கிழக்கு ஒன்றிய செயலாளராக பதவி வகித்து வருகிறார். மேலும் வெளிநாடுகளுக்கு வேலைக்காக ஆட்களை அனுப்பும் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.  

இந்த நிறுவனத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டம் கொத்தங்குடி  மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த 98  பேர் சிங்கப்பூர் செல்வதற்காக தலா 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை பணம் செலுத்தி உள்ளனர். 3 மாதத்தில் அனைவரையும் சிங்கப்பூர் வேலைக்கு அனுப்புவதாகவும் , இல்லையென்றால் பணத்தை திருப்பி அளிப்பதாகவும் ஆனந்தராஜ் ஒப்பந்தம் செய்துள்ளார்.  

ஆனால் ஆறு மாதங்களாகியும் வெளிநாட்டிற்கும் அனுப்பாமல் கட்டிய பணத்தையும் திருப்பி கொடுக்காமல் ஆனந்தராஜ் தொடர்ந்து மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட விசா போலியானது என கண்டறியப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் கொள்ளிடம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாஜக நிர்வாகி ஆனந்தராஜிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

;