science

img

பி.எஸ்.எல்.வி சி-47 ராக்கெட் வரும் 25-ஆம் தேதி விண்ணில் ஏவப்படும் - இஸ்ரோ அறிவிப்பு

கார்ட்டோசாட்-3 உட்பட 13 செயற்கைக்கோள்களை, பிஎஸ்எல்வி சி-47 ராக்கெட் மூலம்  வரும் 25ஆம் தேதி விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இஸ்ரோவின் கார்ட்டோசாட் - 3 செயற்கைக்கோள், 509 கிலோமீட்டர் உயர சுற்றுவட்டப் பாதையில் செலுத்தப்படும். இந்த செயற்கைக்கோள் பூமியையும், பூமியில் உள்ள ஒவ்வொரு பொருளையும் அதி துல்லியமாக படம் பிடிக்கும் திறன் கொண்டது. இதனுடன் அமெரிக்காவின் 13 நானோ செயற்கைக்கோள்களும் பிஎஸ்எல்வி சி-47 ராக்கெட் மூலம் வரும் 25-ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. 
 

;