what-they-told

img

கொரோனா ஊரடங்கில் மேலும் ஒரு தாக்குதலா? தாங்க முடியாத மின்கட்டண சுமை

பல மடங்கு உயர்வைக் குறைத்திடுக : முதல்வருக்கு சிபிஎம் வலியுறுத்தல்

சென்னை,ஜூன் 29- கொரோனா தொற்று பரவல் தடுப்பு ஊரடங்கில் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி அவதிப்பட்டு வரும் நிலையில், பல  மடங்கு அதிகரித்து தாங்கமுடியாத சுமையான மின்கட்டணத்தை தமிழக அரசு குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக முத லமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார். முதல்வருக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: கொரோனா ஊரடங்கு காலத்தில் மத்திய, மாநில அரசுகள் பொதுமுடக்கத்தை  அமலாக்கி வருகின்றன. இதன் விளைவாக, இக்காலம் முழுவதும் மக்கள் வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் மின் நுகர்வும் அதிகரித்துள்ளது. இன்னொரு பக்கம் வேலை, வருமானம் இல்லாமல்  மக்களுடைய வாழ்வாதாரம் பெரும் நெருக்க டிக்கு உள்ளாகி பசியும், பட்டினியுமாக வாழ்ந்து  வருகின்றனர். ஏழை, எளிய மக்கள் வீட்டு வாடகைக் கூட செலுத்த முடியாமல் வீடுகளை காலி செய்துவிட்டு சொந்த ஊருக்கு திரும்பும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நெருக்கடியான காலத்தில் மின் கட்டணம் பல  மடங்கு உயர்ந்து பொதுமக்களுக்கு தாங்க முடியாத சுமையினை அளித்து வருகிறது.

மேலும், மின்சார வாரியம் இரண்டு மாதங் களுக்கு ஒரு முறை மின்நுகர்வை கணக்கிட்டு கட்டணம் வசூலிக்கும் முறையை மேற்கொண்டுள்ளது. இதனால் 500 யூனிட்டுக்கு மேல் மின்சாரத்தை பயன்படுத்தும் மின் நுகர்வோர் இரண்டு மடங்கு கட்டணம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. கொரோனா காலத்தில் மின்நுகர்வின் அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ள மின் கட்டணம் என்பது அரசு அறிவித்த நிவாரணத்தொகை ஆயிரம் ரூபாயை விட பல மடங்கு கூடுதலாக உள்ளது. ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு ஏற் பட்டுள்ள சிரமங்களை அங்கீகரித்து  கேரள  அரசு உள்பட பல மாநில அரசுகள் மின்கட்ட ணத்தை குறைத்துள்ளன. எனவே, இதை கணக்கில் கொண்டும், மக்கள் அனுபவிக்கும் நெருக்கடிகளை கணக்கில் கொண்டும் தமிழக அரசு மின் கட்டண உயர்விலிருந்து மக்களைப் பாதுகாக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். எனவே, 

கொரோனா காலத்திற்கு முன்பு (2020 ஜனவரி அல்லது பிப்ரவரி மாதம்) மின்நுகர் வோர் எவ்வளவு தொகையை மின்கட்டண மாக செலுத்தியிருந்தார்காளோ அதே தொகையைத்தான் கொரோனா காலம் முடியும் வரை வசூலிக்க வேண்டும். அதற்கு மேல் கூடுதலாக உள்ள தொகையை  மின் நுகர்வோர்களுக்கு நிவாரணமாக  வழங்கு கிற முறையில்  தமிழக அரசே அதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.  

ஏற்கனவே மின்கட்டணத்தை மின்நுகர்வோர் செலுத்தியிருந்தால், அவர்கள் செலுத்தி யுள்ள கூடுதல் கட்டணத்தை எதிர்கால மின் பயன்பாட்டிற்கான கட்டணத்தில் சரி செய்து கொள்ள வேண்டும்.

இதனால் தமிழக மின்சார வாரியத்திற்கு ஏற்படும் இழப்பை தமிழக அரசே ஏற்றுக் கொண்டு ஈடுசெய்ய வேண்டும். எனவே, பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு மேற்கண்ட கோரிக்கையினை ஏற்றுக் கொண்டு மின் கட்டணத்தை குறைப்பதற்கு தமிழக அரசின் சார்பில் உரிய நடவடிக்கை களை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். 

இந்த கடிதம் தமிழக மின்சாரத்துறை அமைச்சர், தமிழ்நாடு மின்உற்பத்தி-மின்பகிர் மானக் கழகத் தலைவர்,மின்சாரத்துறை செய லாளர் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

;