tamilnadu

img

மராட்டிய போலீசார்களை மிரட்டும் கொரோனா...  மேலும் 67 பேருக்கு பாதிப்பு... 

மும்பை
நாட்டின் நிதிநிலை நகரை கொண்டுள்ள மகாராஷ்டிரா மாநிலம் கொரோனாவால் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறது. தற்போது நாட்டின் கொரோனா மையமாக உள்ள மகாராஷ்டிராவில் இதுவரை 1.64 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 7,429 பேர் உயிரிழந்துள்ளனர். 85 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்.      

குறிப்பாக ஊரடங்கு பணிகளை கவனித்துவரும் போலீசார்களை கொரோனா வைரஸ் மிரட்டி வருகிறது. இதுவரை 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 59 பேர் பலியாகியுள்ளனர். மேலும் கடந்த 24 மணிநேரதத்தில் மட்டும் புதிதாக 67 போலீசாருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது. 

இதன்மூலம் அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்ட போலீசார்களின் எண்ணிக்கை 4,810 ஆக உயர்ந்துள்ளது.2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் போலீசார்கள் கொரோனாவிலிருந்து மீண்டுள்ள நிலையில், இன்னும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

;