tamilnadu

நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

திருநெல்வேலி, ஜூன் 23- நெல்லை மனோன்மணி யம் சுந்தரனார் பல்கலையில் நுழைவுத்தேர்வுக்கு விண் ணப்பிக்க ஜூலை 6ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக் கப்பட்டுள்ளது  இதுகுறித்து ம.சு.பல்க லைக் கழகத்தின் பதிவாளர் சந்தோஷ்பாபு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது: நெல்லை மனோன்மணி யம் சுந்தரனார் பல்கலைக்கழ கத்தின் பல்வேறு துறைகளில் உள்ள பாடப் பிரிவுகளில் இளம் முனைவர் மற்றும் முனைவர் பட்டத்திற்கான பிற்சேர்க்கை தகுதி நுழை வுத் தேர்வுக்கு விண்ணப்பிக் கும் நாள் ஜூலை 6 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது மேலும் இதற்கான நுழைவுத் தேர்வு வரும் ஜூலை 10 ஆம் தேதி அன்று பல்கலைக்கழ கத்தில் நடைபெற உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார்.

;