tamilnadu

img

பாஜக தவறுகளை மன்னித்து மக்கள் வாக்களித்துள்ளார்கள்

மும்பை:
மக்களவைத் தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற்றுள்ள நிலையில்,இந்த வெற்றிக்கான காரணத்தை, பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி கண்டுபிடித்துக் கூறியுள்ளார்.‘ஹப்போஸ்ட்’ என்ற பத்திரிக்கைக்கு சுப்பிரமணியசாமி பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

“இந்தத் தேர்தலில் சாதியைவிட மதத்திற்கு மக்கள் முக்கியத்துவம் கொடுத்திருப்பது தெரிகிறது. இளம் தலைமுறை வாக்காளர்களின் எண்ணம் மிக முக்கியம். இளம் தேசியவாதிகள் சாதியைப் பற்றி கவலை கொள்வதில்லை. இந்த வெற்றிக்கு காரணம் மோடி அலை இல்லை. இது இந்துத்துவா அலை. மோடி அரசின் மோசமான பொருளாதார வளர்ச்சியை இந்தியர்கள் மன்னித்துள்ளனர். அதற்குப் பதிலாக5 ஆண்டுகள் ஊழலற்ற ஆட்சிக்காக வாக்களித்துள்ளனர். மேலும், வங்கதேசத்திலிருந்து ஊடுருபவர்களை கண்டறிவதற்கு மோடி அரசு எடுத்த முயற்சிகளையும் மக்கள் உணர்ந்து கொண்டுள்ளனர்.இவ்வாறு சுப்பிரமணியசாமி கூறியுள்ளார்.

;