tamilnadu

img

ஓஎன்ஜிசி நிறுவனத்தில் தீ விபத்து- 7 பேர் பலி

மும்பையில் ஓஎன்ஜிசி நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

மகாராஷ்டிர மாநிலம் நவிமும்பை அருகே யுரானில் ஓ.என்.ஜி.சி.க்கு சொந்தமான எண்ணெய், எரிவாயு சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு படை வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தீ விபத்தால் சுமார் 1.5 கி.மீ தூரம் பகுதி பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிலையில் தீ விபத்தால்  இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளன. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். 

;