tamilnadu

img

கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி குழாயில் மீண்டும் கச்சா எண்ணெய் கசிவு 

கும்பகோணம்:
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே கதிராமங்கலம் பகுதியில்  ஒன்பது ஆழ்துளை கிணறுகள் அமைத்து ஓஎன்ஜிசி நிறுவனம்  கச்சா எண்ணெய் எடுத்து வருகிறது. இந்நிலையில் கதிராமங்கலத்தில் கடந்த ஆண்டு இப்பகுதியில் ஓஎன்ஜிசி கச்சா எண்ணெய் வெளியேறியதால் அப்பகுதி மக்கள் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைதொடர்ந்து ஓஎன்ஜிசி நிறுவனம் வெளியேற வேண்டுமென மக்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் அரசு, காவல்துறையை வைத்து கதிராமங்கலம் பகுதியை கட்டுக்குள் வைத்து மக்களின் போராட்டத்தை ஒடுக்கினர்.

இந்நிலையில் வியாழன் அன்று கதிராமங்கலம் பகுதியில் மீண்டும் ஓஎன்ஜிசி குழாயில் இருந்து கச்சா எண்ணெய் வெளியேறி ஆற்றில் கலந்தது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். தகவலறிந்த ஓஎன்ஜிசி அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று கச்சா எண்ணெய் வெளியேறுவதை தடுத்து நிறுத்தி சீர் செய்தனர். எனினும் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.  
 

;