tamilnadu

img

தில்லி: துணிக்கிடங்கில் தீ விபத்து - 9 பேர் பலி

தில்லியில் துணிக்கிடங்கில் ஏற்பட்ட  தீ விபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
தில்லியில்  கிராரி என்ற  இடத்தில் உள்ள துணிக்கிடங்கில் நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்துள்ளனர். இதைத்தொடர்ந்து தீவிபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

;