tamilnadu

img

கர்நாடக பாஜக தலைவருக்கும் தேர்தல் ஆணையம் சலுகை!

புதுதில்லி:
நீதிமன்றத்தால் தண்டனை பெற்றஅரசியல்வாதிகள் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி ஆறு ஆண்டுகளுக்குதேர்தலில் நிற்க தடைவிதிக்கப் பட்டுள்ளது. ஆனால் தேர்தல் ஆணையம் தனக்குள்ள பிரத்யேக அதிகாரத்தைப் பயன்படுத்தி தகுதியிழப்புக்கு உள்ளான நபர்களுக்கு சலுகை காட்டி வருகிறது.இதற்கு முன்பு, பாஜக கூட்டணியில் இருக்கும் சிக்கிம் முதல்வர் பிரேம்சிங் தமாங்கிற்கு, அவர் தேர்தலில் நிற்பதற்கான தடை நீங்கும் வகையில் சலுகை காட்டப்பட்டது. ஊழல் வழக் கில் தண்டனை பெற்ற தமாங்-கின் 6 ஆண்டு தடைக் காலத்தை, ஓராண்டு 9 மாதங்களாக குறைத்தது. 

தற்போது கர்நாடக பாஜக தலைவரின் தகுதியிழப்புக் காலத்தைக் குறைத்து, அவருக்கும் தேர்தல் ஆணையம் சலுகை காட்டியுள்ளது.கர்நாடக பாஜக தலைவர்களில் ஒருவரான முனிராஜ் கவுடா கடந்த 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில்போட்டியிட்டார். தனது செலவுக்கணக்கை முறையாக சமர்ப்பிக்காததால் 2019 ஜனவரி 9 ஆம் தேதி முதல்மூன்று வருடங்களுக்கு தேர்தலில் நிற்கதேர்தல் ஆணையம் தடை விதித்தது.இந்நிலையில், “மக்கள் பிரதிநிதித் துவ சட்டத்தின் 11 ஆவது பிரிவு தேர்தல்ஆணையத்துக்கு அளித்துள்ள சிறப்புஅதிகாரத்தின்படி, தேர்தலில் போட்டியிட விதிக்கப்பட்ட தடைக் காலத்தை நீக்கவோ, குறைக்கவோ தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் உண்டு. அந்த வகையில் கவுடாவின் கோரிக்கை மனுவை பரிசீலனை செய்து அவர்தேர்தலில் போட்டியிட விதிக்கப்பட்ட 3 ஆண்டு தடைக் காலம், ஒன்பது மாதம், ஒன்பது நாட்களாக குறைக்கப்படுகிறது” என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

;