tamilnadu

img

ரயில் இயக்கப்படுவதாக பொய் பிரச்சாரம்.... இளைஞர் காங்கிரஸ் தலைவர் கைது

மலப்புரம்: 
கேரள மாநிலம் நிலம்பூரிலிருந்து (மலப்புரம் மாவட்டம்) வட இந்தியாவுக்கு ரயில் இயங்குவதாக எடுவண்ண மண்டல இளைஞர் காங்கிரஸ் செயலாளர் ஜாகிர் துவாக்காடு வாட்சாப் குழுவில் பொய்யான தகவலை தெரிவித்தார். 

இவரது தகவல் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவ வெளிமாநில தொழிலாளர்கள் பலர் சொந்த ஊருக்கு செல்ல கூட்டமாக திரண்டுள்ளனர்.  இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் இது பொய் செய்தி என தெரிவித்து கூட்டத்தை கலைத்துள்ளனர். 
தொடர்ந்து பொய் பிரச்சாரம் செய்த ஜாகிர் துவாக்காடு மீது ஐபிசி 153, கேஎபி 118 உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பொய் பிரச்சாரம் செய்யும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மலப்புரம் மாவட்ட ஆட்சியரும், எஸ்பியும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.   

;