tamilnadu

img

உத்தரப்பிரதேசத்தில் 128 கைதிகளுக்கு கொரோனா தொற்று... 

ஜான்சி 
நாட்டில் கொரோனா பரவல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக தினசரி பாதிப்பு எண்ணிக்கை 35 ஆயிரத்துக்கு மேல் உள்ள நிலையில், நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவில் 49 ஆயிரம் பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 
இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலத்தின் ஜான்சி சிறைச்சாலையில் 748 கைதிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 128 கைதிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சிறைச்சாலை மருத்துவத்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டு 4 கூடங்களை பிரித்து மினி கொரோனா மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது. அங்கு சுழற்சி முறையில் மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.   

உத்தரபிரதேசத்தின் கொரோனா பாதிப்பு நிலவரம்: (மாலை 4 மணி நிலவரம் - ஜூலை 24)  

மொத்த பாதிப்பு - 58,104

பலி - 1289

குணமடைந்தவர்கள் - 35,803

சிகிச்சையில்   - 21,012

;