tamilnadu

img

தில்லியில் அதிகரிக்கும் கொரோனா பலி எண்ணிக்கை....  ஒரே நாளில் 18 பேர் பலி  

தில்லி 
நாட்டின் தலைநகர் பிரதேசமான தில்லியில் கொரோனா பரவல் மின்னல் வேகத்தில் உள்ளது. தினமும் 500-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் மேலும் 571 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் அங்கு மொத்த பாதிப்பு 11 ஆயிரத்து 659 ஆக உயர்ந்துள்ளது. குறிப்பாக இன்று ஒரே நாளில் 18 பேர் பலியாகியுள்ள நிலையில், தில்லியில் இதுவரை மொத்தம் 194 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். 5 ஆயிரத்து 567 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்த தகவலை தில்லி சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.  

தில்லியில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பது வழக்கமான விஷயம் தான் என்றாலும், ஒரே நாளில் 18 பேர் பலியானது தான் அம்மாநில மக்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது  என்பது குறிப்பிடத்தக்கது. 

;