தில்லி:
தில்லி ஷாகோட்டில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இதய சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தனர் அவர்களை பரிசோதனை செய்ததில் அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களுடன் தொடர்பிலிருந்த 39 மருத்துவர்கள், செவிலியர் மற்றும் பிற ஊழியர்கள் தங்களை சுய தனிமைப்படுத்தலுக்கு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர், இவர்கள் அனைவரயும் கொரோனா வைரஸ் சோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளனர்.
அதே நேரத்தில் இந்த மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் 154 ஊழியர்கள் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் யாருக்கும் வைரஸ் பாதிப்பு இல்லை என்றும் மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.
தில்லி எய்ம்ஸ்-ல் உள்ள கார்டியோ-நியூரோ மையத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் உட்பட சுமார் 30 சுகாதாரப் பணியாளர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த அறிவுறுத்தப்பட்டனர். நரம்பியல் பிரச்சனைகளுடன் எய்ம்ஸுக்கு வந்த 72 வயதான நபர் ஒருவருக்கு கொரோன தொற்று உள்ளது கண்டறியப்பட்டுள்ளதையடுத்து இந்தநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.