tamilnadu

img

லஞ்சம் அளிக்க முயற்சி : உள்துறை அமைச்சக பணியாளர் கைது

சிபிஐ அதிகாரிக்கு லஞ்சம் அளிக்க முயன்ற உள்துறை அமைச்சக பணியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து சிபிஐ அதிகாரி கொடுத்த புகாரில் கூறியதாவது,கட்டமைப்பு நிறுவனமான சோமா எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் மீது வழக்கு நடைபெற்று வருகிறது.இந்நிலையில் வழக்கு தொடர்பாக பேச, சோமா நிறுவனத்தின் பிரதிநிதியாளர் மற்றும் உள்துறை அமைச்சக பணியாளர் தீரஜ் குமார் என்னை சந்தித்தனர்.இதனை தொடர்ந்து வழக்கில் சோமா நிறுவனத்திற்கு சாதகமாக செயல்பட வேண்டுமெனவும், 2 கோடி பணம் தருவதாக வற்புறுத்தியதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார்.இந்த புகாரின் அடிப்படையில் உள்துறை அமைச்சக பணியாளர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

;