tamilnadu

7 பேருக்கு ஆயுள் தண்டனை

புதுக்கோட்டை, ஏப்.23-புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ளது கூத்தினிப்பட்டி கிராமம். இங்குள்ள கோவில் பிரச்சனை தொடர்பாக கடந்த 2017-ஆம் ஆண்டில் அப்போதைய ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேந்திரன் தரப்பினருக்கும், அதே ஊரைச் சேர்ந்த செல்லத்துரை தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டது. கடந்த 12.05.2019 அன்று இரவு ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேந்திரன் தரப்பினர் அரிவாளால் தாக்கியதில் செல்லத்துரை சம்பவ இடத்திலேயே இறந்தார். புண்ணியமூர்த்தி என்பவர் படுகாயமடைந்தார்.இதுகுறித்த புகாரின் அடிப்படையில் அப்போதைய ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேந்திரன், சின்னத்துரை, சதீஸ், ரமேஷ், ஜெயக்குமார், சிவா, ராதாகிருஷ்ணன் ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்குபுதுக்கோட்டையில் உள்ள கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்தநீதிபதி கிங்ஸிலி கிறிஸ்டோபர், மேற்படி 7 பேருக்கும் ஆயுள் தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபதாரமும் விதித்துசெவ்வாய்க்கிழமையன்று தீர்ப்பு வழங்கினார். 

;