tamilnadu

img

பெண் காவலரிடம் பாலியல் அத்துமீறல்? நீலகிரி கூடுதல் காவல் துறை கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம்....

 நீலகிரி:
நீலகிரி மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு கூடுதல் காவல் துறை கண்காணிப்பாளராக பணியாற்றுபவர் சார்லஸ். இவர் இதற்கு முன்பு ஈரோடு மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவில் பணியாற்றினார்.

அப்போது காவல்துறையில் பணியாற்றும் பெண் காவலரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்டவர் புகார் அளித்ததன் பேரில் தவறுக்கான முகாந்திரம் இருப்பதால் தற்போது நீலகிரி மாவட்ட கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளராக இருக்கும் சார்லஸை பணியிடை நீக்கம் செய்து கூடுதல் முதன்மை செயலாளர் பிரபாகர் உத்தரவிட்டார். இந்த பணியிடை நீக்கஉத்தரவு கோவை டி.ஐ.ஜி வாயிலாக நீலகிரி காவல்துறை கண்காணிப்பாளர் சனியன்று வழங்கினார். மேலும் தற்போது பணியில் இருக்கும் நீலகிரி மாவட்டத்திலேயே கூடுதல் காவல் துறை கண்காணிப்பாளர் தங்கியிருக்க வேண்டும் எனவும் அனுமதி இல்லாமல் வேறெங்கும் செல்லக் கூடாது எனவும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. பணியிடை நீக்கம்செய்யப்பட்ட கூடுதல் காவல் துறை கண்காணிப்பாளர் சார்லஸ் கோவை, பொள்ளாச்சி, பவானி உள்ளிட்டபகுதிகளில் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

;