tamilnadu

img

ஜெர்மனியில் துப்பாக்கிச்சூடு - இருவர் பலி

ஜெர்மனியில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இருவர் பலியாகியுள்ளனர்.

ஜெர்மனியின் கிழக்கு பகுதியில் ஹாலே என்ற நகரம் அமைந்துள்ளது. இந்நிலையில் இங்குள்ள சர்ச் அருகே மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டினால் இருவர் பரிதாபமாக பலியாகினர். இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த போலிசார் துப்பாக்கிச் சூடு நடத்திய இருவரில், ஒருவரை கைது செய்துள்ளனர். மேலும் தப்பி ஓடிய மற்றொருவரை தேடி வருவதாக கூறியுள்ளனர்.  
 

;