tamilnadu

img

நாமக்கல் கொமதேக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம்

நாமக்கல், ஏப்.16-நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி கொமதேக வேட்பாளர் ஏ.கே.பி.சின்ராஜை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, வாலிபர் சங்கம், மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் பிரச்சாரம் நடைபெற்றது. மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் ஏ.கே.பி.சின்ராஜை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திருச்செங்கோடு நகரம் முழுவதும் இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது. இப்பேரணியை கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆதிநாராயணன் துவக்கி வைத்தார். இதில் நகர செயலாளர் ராயப்பன், ஒன்றிய செயலாளர் வேலாயுதம், நகர ஒன்றிய குழு உறுப்பினர்கள் உட்பட பெரும் திரளாக கலந்து கொண்டனர்.


பரமத்திவேலூர்

பரமத்திவேலூரில் கொமதேகவேட்பாளர் ஏ.கே.பி. சின்ராஜ்க்கு உதய சூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே. தங்கமணி தலைமையில் கபிலர்மலை, பொத்தனூர், வேலூர் ஆகிய பகுதிகளில் துண்டுபிரசூரம் கொடுத்து வாக்கு சேகரிப்பு பிரச்சாரம்நடைபெற்றது. இதில் வட்டக்குழ உறுப்பினர்கள் ஏ.கே.சந்திரசேகரன், எஸ்.கே.பொன்னம்பலம், எம்.செல்வராணி, பி.குணசேகரன், எஸ்.லதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


வாலிபர் சங்கம்

குதியில் வேட்பாளர் ஏ.கே.பி. சின்ராஜ்யை ஆதரித்து இந்தியஜனநாயக வாலிபர் சங்கத்தின்எலச்சிபாளையம் மல்லசமுத்திரம் ஒன்றியக் குழு செயலாளர் ஆர்.சக்திவேல் தலைமையில் பிரச்சாரம் நடைபெற்றது. ஒன்றியத்தில் எலச்சிபாளையம், செக்காங்காடு, சந்தைபேட்டை, குமரமங்கலம், மோளிபள்ளி, நல்லிபாளையம், செம்பாம்பாளையம், காந்திஆசிரமம், புதுப்பாபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர். இதில் ஒன்றிய குழுஉறுப்பினர் இளவரசன் சக்திவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


மத்திய தொழிற்சங்கங்கள்

நாமக்கல் மாவட்ட மத்தியதொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் வேட்பாளர் ஏ.கே.பி.சின்ராஜை ஆதரித்து திருச்செங்கோடு நகரத்தில் வாக்குசேகரிப்பு பிரச்சாரம் எல்பிஎப் மாவட்ட செயலாளர் ஆர்.சுந்தரமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இதில், சிஐடியு மாவட்டசெயலாளர் ந.வேலுச்சாமி, ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலாளர் பி.தனசேகரன், விசைத்தறி பிரிவுதொமுச அமைப்பாளர் பி.சௌந்தரராஜன், தையல் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ஐ.ராயப்பன், திருச்செங்கோடு நகரசுமை தூக்குவோர் தொழிலாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

;