tamilnadu

img

தொற்றுநோய் பயத்தில் திருவண்ணாமலை மக்கள்

திருவண்ணாமலை, அக்.9- திருவண்ணாமலை கால்நடை மருத்துவ மனை எதிரே உள்ள சமுத்திரம் காலனி பகுதி யில், கழிவுநீர் வெளியேற கால்வாய்கள் அமைக்கப்படாததால், தெருக்கள் அனைத்தி லும் கழிவு நீர் வழிந்தோடி தொற்றுநோய் பரவும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை நகரம் முழுவதும் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடந்து முடிந்துள்ள நிலையிலும், சமுத்திரம் காலனி பகுதியில் மட்டும் கழிவு நீர் கால்வாய் முறை யாக அமைக்கப்படவில்லை. அங்கிருந்து வெளியேறும் கழிவுகள் சாலை ஓரம் தேங்கி  நிற்கிறது. மிக மோசமான துர்நாற்றம் வீசும்  பகுதியாக மாறியுள்ளது. மேலும் இப்பகுதி யில் போதுமான பொதுக் கழிவறைகள் இல்லாதால், மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கடந்த 20 ஆண்டுகளாக நீடித்து வருவ தால் அப்பகுதியில் வசிக்கும்  மக்கள் மிகுந்த  மன வேதனைக்கு ஆளாகியுள்ளனர். கல்நகர்  மற்றும் கல்குதிரை தக்கா தெரு பகுதியில் சாதாரண ஏழை, எளிய மக்கள் வசித்து வரு கின்றனர். திருவண்ணாமலை நகருக்கு மாதந்  தோறும் பல்வேறு ஊர்களில் இருந்து மக்கள்  வருகை தருகின்றனர். திருவண்ணாமலை நகரில் பொது சுகாதாரத்தை காக்க வேண்டி யது நகராட்சி நிர்வாகத்தின் கடமை. அதை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இல்லை யென்றால் டெங்கு உள்ளிட்ட தொற்றுநோய் பரவும் நிலை உருவாகும் என அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறிய போது, “கமிஷன் எடுப்பதில் மட்டுமே குறிக் கோளாக இருக்கும் திருவண்ணாமலை நக ராட்சி நிர்வாகம், குடியிருப்பு பகுதியில் சுகா தாரத்தை ஒரு பொருட்டாகவே நினைக்க வில்லை. இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்தி டம் பல முறை புகார் தெரிவித்தும் எந்த நட வடிக்கையும் எடுக்கவில்லை” என்றனர்.

;