tamilnadu

கொரோனா பணியின் போது இறந்த வருவாய்துறை அலுவலருக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை

தாராபுரம், ஜூன் 12 - கொரோனா பணியின்போது மரணமடைந்த திருச்சி வருவாய் ஆய்வாளர் சேகர் குடும்பத்திற்கு ரு.50 லட்சம் நிவாரணம் வழங்க வலியுறுத்தி தமிழ் நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் வெள் ளியன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த் திகேயனிடம் மனு அளித்தனர்.

தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கம் சார் பில் கொரோனா பணியின்போது மரணமடைந்த திருச்சி வருவாய் ஆய்வாளர் சேகர் குடும்பத்திற்கு ரு.50 லட்சம் நிவாரணம் வழங்கவேண்டும். மாநிலம் முழுவதும் காலியாக உள்ள துணை ஆட்சியர் பணி யிடங்களை உடனடியாக நிரப்பவேண்டும். முது நிலை வருவாய் ஆய்வாளர் நிலையில் ஒருங்கி ணைந்த பணி முதுநிலைக்கு நீதிமன்ற தீர்ப்பின்படி அரசாணை வெளியிடவேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி சங்கத்தின் மாவட்ட செயலா ளர் ச.முருகதாஸ் தலைமையில் மாவட்ட ஆட்சியரி டம் வெள்ளியன்று மனு அளித்தனர்.

இதன்பின்னர், தாராபுரத்தில் வருவாய்துறை அலுவலர்கள் கோரிக்கை அடங்கிய பேட்ஜ் அணிந்து பணியாற்றி னர்.

;