tamilnadu

கடைகளில் வியாபாரம் நேரம் குறைப்பு

அவிநாசி, ஜூலை 2- அவிநாசி அருகே கருவலூரில் கொரோனா பரவல் அச்சத்தால் கடை திறப்பு நேரத்தை  குறைத்திட ஊராட்சி நிர் வாகம் அறிவுறுத்தியுள்ளது. அவிநாசி ஒன்றிய பகுதியில் நான்கு நபர் களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியா னது. இதனால் கருவலூர் ஊராட்சி நிர்வா கம் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மளிகை கடைகள், காய்கறி, துணிக்கடை, பர்னிச்சர், செல்போன், பேன்சி ஸ்டோர், சலுான் உள்ளிட்ட கடை கள் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்படுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பகுதிநேர கடையடைப்பு என்பது ஜூலை 5 ஆம் தேதி முதல் ஜூலை 20 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கருவலூர் ஊராட்சியில் முகக் கவசம் அணியாமல் வெளியே வருபவர்க ளிடம் 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என  உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன் னதாக, சேவூர் பகுதியிலும் காலை 6  மணி முதல் மதியம் 2 மணி வரை மட் டுமே கடைகள் திறந்திருக்கும் என கடை உரிமையாளர்கள் தரப்பில் அறிவிக்கப்பட் டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

;