tamilnadu

உண்டியலை உடைத்து ரூ.1 லட்சம் கொள்ளை

தரங்கம்பாடி, ஏப்.6-

நாகை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் வடகரை கிராமத்திலுள்ள பள்ளிவாசலில் உள்ள உண்டியலை உடைத்து 1 லட்சம்ரூபாயை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்று விட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இத்தொகையினை வைத்து ரமலான் பண்டிகையின் போது ஏழை, எளிய மக்களுக்கு உதவி செய்வது வழக்கமாய் இருந்துள்ளது. இதனை சனியன்று அதிகாலை மர்மநபர்கள் திருடி சென்று விட்டதாக ஜமாத் நிர்வாகிகள் செம்பனார்கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில்வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

;