tamilnadu

அரசுப் பள்ளி ஆண்டு விழா

மன்னார்குடி, ஏப்.12-ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி புதிய கட்டிட திறப்பு விழா, விளையாட்டு விழா, ஆண்டு விழாஎன முப்பெரும் விழா நடைபெற்றது. பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் செ.உஷாநந்தினி தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் இரா.அமுதா வரவேற்றார். ஓய்வுபெற்ற தொடக்க கல்வி அலுவலர் கவிஞர் பொன்.கண் ணகி, புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளர் யு.எஸ்.பொன்முடி சிறப்புரை நிகழ்த்தினார். முன்னாள் ஊராட்சி தலைவர்கள் அ.ஆடலரசன், ரெ.அல்லிராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியை தி.சுதா ஆண்டறிக்கை வாசித்தார். ஆசிரியர்கள் சோ.பாலமாணிக்கம், வி.குமரவேலு, வீ.செங்குட்டுவன், கா.சிவரஞ்சனி, பொ.கயல்விழி, தேவ.மணிவாசகம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர் கள் சி.பாஸ்கரன், பி.அலெக்ஸ் பாண்டியன் ஆகியோர் மாணவர்களுக்கு பரிசுவழங்கினர். முன்னாள் மாணவர்கள் சார்பில் ரூ.3 லட்சத்து65 ஆயிரம் நிதியில் பள்ளிகட்டிடங்கள், மாணவர்இருக்கை, குடிநீர் சுத்திகரிக்கும் இயந்திரம், கழிவறை வசதி உள்ளிட்டவை ஏற்படுத்தப்பட்டன.

;