tamilnadu

img

நாளை முதல் மளிகைக் கடைகளுக்கு கூடுதல் நேரம்

கட்டுப்பாடுகளுடன் டீக்கடைகள் திறக்க அனுமதி

சென்னை,மே 9- தமிழகத்தில் வரும் திங்கட்கிழமை முதல் மளிகைக்கடைகள் செயல்பட கூடு தல் நேரம் வழங்கப்பட்டுள்ளது. தேநீர் கடைகள் திறக்கவும் அனுமதிக்கப் பட்டுள்ளது. இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு: தமிழ்நாட்டில் கொரோனா நோய் தொற்றை தடுப்பதற்காக மாநில பேரிடர்  மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரட ங்கு உத்தரவு மார்ச் 24 முதல்  அமலில் இருந்து வருகின்றது.  கடந்த மே 2 அன்று தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்ட த்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படை யிலும், மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவுரைகளின்படியும், பெருநகர சென்னை காவல் துறை யின் எல்லைக்குட்பட்ட பகுதிகள் மற்றும் தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் பல்வேறு பணிகளுக்கு வரைமுறை களுடன் அனுமதி அளிக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக,  தமிழ்நாடு முழுவதும் (நோய்க் கட்டுப்பாட்டு பகுதி கள் தவிர) கீழ்க்காணும் பணிகள் மே 11 திங்கள்கிழமை முதல் குறிப்பிடப்பட்ட நேரத்தில் செயல்பட அனுமதி அளிக்கப் படுகிறது. அத்தியாவசியபொருட் களான காய்கறிகள், மளிகைப்பொருட் கள் விற்பனை செய்யும் கடைகள் பெருநகர சென்னை மாநகர எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படும். பிற தனிக்கடைகள்  காலை 10.30 மணி முதல் மாலை 6 மணி வரை செயல் படும். அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள், மளிகைப் பொருட்கள் விற் பனை செய்யும் கடைகள் சென்னை பெருநகரம் தவிர்த்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளிலும், காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை செயல் படும். பிற தனிக்கடைகள் காலை 10 மணி  முதல் இரவு 7 மணி வரை செயல்படும்.

தேநீர்கடைகளுக்கு அனுமதி

சென்னை மாநகராட்சி உட்பட தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளி லும்(நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர) தேநீர் கடைகள் பார்சல்  சேவை க்கு மட்டும்,  காலை 6 மணி முதல் இரவு  7 மணி வரை  செயல்பட அனுமதிக்கப் படுகிறது. தேநீர் கடைகளில் சமூக இடைவெளியை தவறாமல் கடைப் பிடிக்க வேண்டும். மேலும், தினமும் 5 முறை கிருமிநாசினி தெளித்து, கடையை  சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும். கடையில், வாடிக் கையாளர்கள் நின்றோ, அமர்ந்தோ  ஏதும் உட்கொள்ள அனுமதி இல்லை. இதை முறையாக கடைப்பிடிக்க தவறும் தேநீர் கடைகள் உடனடியாக   மூடப்படும்.

பெட்ரோல் நிலையங்கள்

பெருநகர சென்னை காவல் துறை  எல்லைக்குட்பட்ட பகுதிகளில்  பெட்ரோல் நிலையங்கள்  காலை 6 மணி முதல் மாலை 6  மணி வரை செயல் படும். பெட்ரோல் பம்புகள் பெருநகர சென்னை காவல் துறை எல்லைக்கு  உட்ட்ட பகுதிகளை தவிர்த்து தமிழ்நா ட்டில் உள்ள அனைத்து பகுதிகளிலும், காலை 6 மணி முதல் இரவு 8  மணி வரை செயல்படும். தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள பெட்ரோல் பம்புகள் 24 மணி நேரமும் செயல்படும்.

தனியார் நிறுவனங்கள் செயல்பட அனுமதி 

பெருநகர சென்னை மாவட்டத்தில்  அனைத்து தனியார் நிறுவனங்கள் 33 சதவிகித பணியாளர்களுடன்  காலை 10.30  மணி முதல் மாலை  6 மணி வரை செயல்படும். பெருநகர சென்னை காவல் துறை  எல்லைக்குட்பட்ட பகுதி களை தவிர்த்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளிலும்,  அனைத்து தனியார் நிறுவனங்கள்  33 சதவிகித பணி யாளர்களுடன்  காலை 10  மணி முதல் மாலை  7  மணி வரை செயல்படும்.

அரசால் அறிவுறுத்தப்பட்ட தனி நபர் இடைவெளியை பின்பற்றுவதை யும், போதுமான கிருமிநாசினிகளை பயன்படுத்தி பணிபுரிவதையும், பணி யாளர் மற்றும் தொழிலாளர்கள் பாது காப்பாக பணிபுரிவதையும், அரசால் வெளியிடப்பட்டுள்ள நிலையான செயல்பாட்டு வழிமுறைகளை  தீவிர மாக கடைப்பிடிப்பதையும், கண்காணி க்குமாறு அனைத்து மாவட்ட ஆட்சி யர்களும், மாநகராட்சி ஆணையாளர் களும், காவல் துறையினரும் அறி வுறுத்தப்படுகிறார்கள்.

அரசால் ஏற்கனவே அனுமதிக்கப் பட்ட அனைத்து தளர்வுகளும், தடை களும் மறு உத்தரவு வரும் வரை  தொடர்ந்து முழுமையாக கடைப்பிடிக்க ப்படும்.  கொரோனா நோய்த் தொற்றின் தாக்கத்தை கட்டுப்படுத்த அரசு எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகளுக்கு பொதுமக்களும், தனியார் நிறுவனங் களும் முழு ஆதரவையும், ஒத்துழைப் பையும் நல்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

 

 

;